News January 15, 2026
திருச்சி: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II, IIA, குரூப்-IV தேர்வுகளை போட்டி தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
கழிவுகளை ஆற்றில் கலந்துவிட்ட மாநகராட்சி ஊழியர்கள்

திருவெறும்பூர் அருகே திருநகரில் உய்யக்கொண்டான் ஆறு செல்கிறது. அங்கு பாதாள சாக்கடை கழிவுகளை நேரடியாக திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் கலந்துவிடும் கொடுமை நேற்று அரங்கேறியது. ஏரி, குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய அரசு ஊழியர்களே இதுபோன்று செயலை செய்தது, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News January 20, 2026
திருச்சி: பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சி

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து துரித உணவுகள் தயாரித்தல் குறித்து 12 நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
திருச்சி: பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சி

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து துரித உணவுகள் தயாரித்தல் குறித்து 12 நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


