News May 11, 2024

திருச்சி: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News July 6, 2025

திருச்சியில் போலீஸ் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

திருச்சி, கிராப்பட்டி சிறப்பு காவல் படை முதலாம் அணியில், அரசு விதிப்படி கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 11-ம் தேதியன்று ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்கள் வரும் 9-ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 11-ம் தேதி ரூ.2000 முன் வைப்பு தொகையாக செலுத்தி, ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என சிறப்பு காவல் படை முதலணி கமாண்டர் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

திருச்சி: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சில உரக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மானிய உரங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ததில், 4 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!