News February 25, 2025
திருச்சி சிறையில் வெளிநாட்டு கைதி உண்ணாவிரதம்

திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. கொட்டப்பட்டு சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, உகாண்டா, ஆஸ்திரேலியா, சீனா, பல்கேரியா போன்ற பல்வேறு நாட்டு விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த தங்க ராஜா மகன் சுகந்தன் என்பவர் தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 14, 2025
திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவர் பலி

திருச்சி உத்தமர்சீலியை சேர்ந்த கணபதி (74) என்பவர் தனது விவசாய தோட்டத்திற்கு கடந்த 11-ம் தேதி நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென முட்புதருக்குள் இருந்து ஓடி வந்த காட்டுப்பன்றி அவரை கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <