News February 25, 2026
திருச்சி: சாலை விபத்தில் 3 மாத குழந்தை உயிரிழப்பு – சோகம்

புதுகை மாவட்டம் மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், அகிலா. இவர்களின் 3 மாத குழந்தைக்கு உடல் சரியில்லாததால், துவரங்குறிச்சி உள்ள தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் சென்று திரும்பியுள்ளனர். அப்போது சேத்துப்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Similar News
News February 28, 2026
துறையூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தலைமையில், வரும் மார்.3ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
திருச்சி: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News February 28, 2026
திருச்சி: தாயுமானவர் திட்டம் குறித்த அறிவிப்பு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், வரும் மார்ச்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


