News November 23, 2025
திருச்சி: சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் பாறைப்பட்டி குவாரிக்கு ஜல்லி ஏற்றச் சென்ற லாரி புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி பிரிவு ரோடு புதுக்குளம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் செல்லப்பன்-ஐ மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
திருச்சி: ஒரே ஆண்டில் 849 வழக்குகள்

திருச்சி ரயில்வே காவல் நிலையம் பிச்சாண்டார்கோவில், மணப்பாறை, குமாரமங்கலம், சோழகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாக கொண்டு இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நகை திருட்டு வழக்கு, வழிப்பறி, கைபேசி திருட்டு வழக்குகள் என மொத்தம் 849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பின் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
திருச்சி: கொலை வழக்கில் 4 பேர் கைது

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19-ம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.


