News September 17, 2025
திருச்சி: சமயபுரத்தில் நவராத்திரி விழா முக்கிய UPDATE

திருச்சி, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22-ம் தேதி முதல் அக்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கொலு பொம்மைகள் வைக்கப்படவுள்ளது . இறுதியாக 1ஆம் தேதி அம்பு போடும் நிகழ்ச்சியும், அன்று இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கவிக்கப்ட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 17, 2025
பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயிலானது இன்று (செப்.17) மற்றும் செப்.22 ஆகிய தேதிகளில் திருச்சி – கஞ்சிக்கோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு டவுன் – கஞ்சிக்கோடு இடையே மட்டும் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சிறுகமணி ஆடு,மாடு,கோழி வளா்ப்புப் பயிற்சி

திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு,மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. நாட்டுக்கோழி, கறவைமாடு வெள்ளாடு, செம்மறி ஆடு இனங்கள், ஆடுகளை தோ்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை,தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு,நோய் தடுப்பு முறைகள் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
News September 17, 2025
திருச்சி: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

திருச்சி மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. Click <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!