News March 27, 2025
திருச்சி: சகல தோஷமும் நீங்க அருளும் மும்மூர்த்திகள்

மண்ணச்சநல்லூர் உத்தமர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
Similar News
News August 9, 2025
திருச்சி: சுகாதாரத் துறையில் வேலை

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டத்தில் காலியாக உள்ள 143 செவிலியர், 11 ஆய்வக நுட்புநர், 5 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் ஆக.,21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..
News August 9, 2025
திருச்சியில் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம்

திருச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார மையங்களிலும் நடைபெறும் இம்முகாமில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுடைய கருவுறாத பெண்களுக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
திருச்சி: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <