News October 27, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 573 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, விதவை உதவித்தொகை, தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு மனுக்கள், தொகுப்பு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 573 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
திருச்சி: மக்களே… இனி இது அவசியம்!

திருச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News October 27, 2025
தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு – அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் மா, கொய்யா மற்றும் இதர பழ பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை கவாத்து செய்வதன் மூலம், மரத்தின் சுமையை குறைத்து பாதுகாக்கலாம். சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை அடங்கல் மற்றும் இ-அடங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
திருச்சி: வாகன ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி விமான நிலையத்தில் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை அனுமதிக்க மறுப்பதாக கூறி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுக்க தவறியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


