News January 30, 2026
திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்க வேண்டாம் எனவும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்கை தொட்டு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரினை பதிவு செய்ய கூறியுள்ளது.
Similar News
News February 4, 2026
திருச்சி: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

திருச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News February 4, 2026
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும், திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் பிப்.4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், பொறியியல் பணிகள் காரணமாக திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதவத்தூர், சோமரசம்பேட்டை, குழுமணி, மருவத்தூர், நரசிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம், செங்கட்டுப்பட்டி, உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!


