News April 25, 2024

திருச்சி கல்லூரியில் ஆதார் சேவை முகாம்

image

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது, மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை,திருச்சி கோட்டத்தின் இணைந்து ஆதார் பதிவு, திருத்தம் சேவை முகாமினை தனது கல்லூரி வளாகத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தியது.இறுதி நாளான இன்று புதிய ஆதார் பதிவு செய்தல், முகவரி (ம)புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை திருத்தம் பணி நடைபெற்றது.

Similar News

News July 7, 2025

திருச்சி: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 104 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974036>>(பாகம்-2)<<>>

News July 7, 2025

திருச்சி: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை (2/2)

image

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

image

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!