News October 31, 2025
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.
Similar News
News October 31, 2025
திருச்சி: மகளை சீரழித்த கொடூர தந்தை கைது

துவாக்குடியைச் சேர்ந்தவர் விஸ்வா (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில மாதங்களளாக மனைவியை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகளை இவர் மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் விஸ்வாவை போக்சோவின் கீழ் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
News October 31, 2025
திருச்சி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை அருகே கடந்த 20-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது மதுரை – திருச்சி ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் நேற்று (அக்.30) உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 30, 2025
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.


