News May 27, 2024
திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய இ-சிகரெட்டுகள்

திருச்சி விமான நிலைய AIU அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் இருந்து OD 223 Batik Airlines விமானம் மூலம் வந்த பாக்ஸ்களை சோதனை நடத்தினர். அதில், ரூ.32.12 லட்சம் மதிப்புள்ள 1285 இசிகரெட்டுகள் (VAPE) கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News March 3, 2026
திருச்சி: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருச்சி மக்களே, <


