News November 21, 2025
திருச்சி: எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்

திருச்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
திருச்சி: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
திருச்சி: தப்பி ஓடிய கடத்தல் கும்பலுக்கு வலை வீச்சு

மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மணல் கடத்தல் கும்பல் போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். அதனை தொடர்ந்து வேனை கைப்பற்றிய போலீசார் பூமி பாலன், கிஷோர், பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 22, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை, அணியாப்பூர் அடுத்த வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 23ஆம் தேதி முதல் டிச.12ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


