News September 8, 2025

திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மக்களே இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News September 9, 2025

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு

image

திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் கடந்த செப்.,6-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 9, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 426 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு கோரிக்கை, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட 426 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

image

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!