News October 24, 2025

திருச்சி: இளைஞர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2025 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்து இருக்க வேண்டும். தகுதி உடைய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

திருச்சி: மத்திய சிறையில் கைதி பலி

image

திருச்சி மத்திய சிறைச்சாலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டு இருந்த பெரம்பலூரைச் சேர்ந்த தினேஷ் (30) என்பவர் நேற்று இரவு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. முழங்கால் அளவிலான தண்ணீரில் இறந்து கிடந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 24, 2025

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் மைய நூலகத்தில் நாளை (அக்.,25) மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இதில், மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர்கள் முருகேஸ்வரி, ஸ்ரீனிவாஸ் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 24, 2025

திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK செய்க<<>>.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!