News October 25, 2025
திருச்சி: இரிடியம் விற்பதாக மோசடி- சிபிசிஐடி விசாரணை

திருச்சி, மருங்காபுரி அருகே உள்ள நெல்லிப்பட்டியைச் சேர்ந்த நல்லமுத்து, சியாமளா தம்பதியினர் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிசிஐடி போலீசார் நேற்று அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தம்பதியினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 24, 2026
திருச்சி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

திருச்சி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News January 24, 2026
திருச்சி: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

திருச்சி மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


