News February 12, 2026
திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
Similar News
News February 14, 2026
திருச்சி: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திருச்சி: மாடு குறுக்கே வந்ததால் விபரீதம் – போலீஸ் பலி!

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று காலை தனது டூவீலரில் கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 14, 2026
திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மணப்பாறையை அடுத்த வெள்ளபூலாம்பட்டியில் உள்ள நியாயவிலைக்கடை வளாகத்தில் பிப்.14ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுவதில் இப்பகுதி மக்கள் கலந்து கொண்டு, தங்களின் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை, மனுவாக அளித்து பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


