News July 5, 2025
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்

வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (32) சேல்ஸ்மேன் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் அதிக பணம் இழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
திருச்சி: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News July 5, 2025
திருச்சி: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

திருச்சி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <