News October 11, 2025

திருச்சி: ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 10,479 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

image

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

திருச்சி: தனியார் பஸ் மோதி பரிதாப பலி

image

லால்குடி பெருவெள்ளநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (54). இவர் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னார்புரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அவ்வழியாக வந்த தனியார் பஸ் சங்கர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பஸ் டிரைவர் உதயகுமார் (30) மீது வழக்கு பதிந்த போலீசார், பேருந்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!