News November 11, 2025

திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு

image

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்- I வரும் 15 ஆம் தேதி 14 தேர்வு மையங்களிலும், தாள் – II வரும் 16 ஆம் தேதி 51 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. இதில், தாள் I – 3946 பேரும், தாள் II – 15,286 பேரும் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்கள் பறக்கும் படையினர் மூலம் கண்காணிக்கப்படும். நுழைவு சீட்டு மற்றும் விவரங்களுக்கு 18004256753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

திருச்சியில் காலை கொலை; நண்பகல் குற்றவாளிகள் கைது

image

திருச்சி, பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் தாமரைச்செல்வன் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்டோரை சில மணி நேரங்களில் திருச்சி மாநகர போலீசார் அதிரடியாக விரட்டிச் சென்று கைது செய்தனர்.

News November 10, 2025

திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம்

image

திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான எழும்பூர், தாம்பரம் வழியை தவிர்த்து ரேணிகுண்டா, திருத்தணி வழியாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

திருச்சி மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

திருச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!