News April 17, 2024
திருச்சி அருகே விபத்து; 5 பேரின் நிலை?

எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி திருவானைக்காவல் அருகே பஸ் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு உரம் முட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News December 28, 2025
திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
News December 28, 2025
திருச்சி: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

திருச்சி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <
News December 28, 2025
திருச்சி வழியாக புதிய ரயில் அறிவிப்பு

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக பனாரஸ் சிறப்பு விரைவு ரயில் வரும் 30ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து 30 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக பனாரஸ் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


