News October 31, 2025

திருச்சி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

image

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை அருகே கடந்த 20-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது மதுரை – திருச்சி ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் நேற்று (அக்.30) உயிரிழந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>> என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த வேன் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவரை, முன்விரோதம் காரணமாக முத்துப்பாண்டி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டவே, குற்றவாளி முத்துபாண்டிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்,

News October 31, 2025

திருச்சி மாவட்டம் சாதனை!

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர், கல்லுாரிக்கனவு உள்ளிட்ட திட்டங்கள் மூலமான எடுத்த தொடர் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில், 10,864 பேர் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!