News October 26, 2025
திருச்சி அருகே டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் நேற்று (அக்.24) அவரது 50 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை சிந்தாமணி அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவரது டூவீலரை 14 வயதுடைய சிறுவன் திருடி சென்றதை கண்டறிந்தார். மேலும், இதேபோல, விஜயலட்சுமி என்பவரின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரையும் 14 வயதுடைய சிறுவன் திருடியதை கண்டறிந்தார். இதுகுறித்த புகாரில் கோட்டை போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.
Similar News
News October 28, 2025
திருச்சி: உங்க Phone Missing-ஆ? கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருச்சி: வெளிமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமித்டே என்பவர் மணப்பாறை அருகே இயங்கி வரும் TNPL நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி பணிமுடிந்து வெளியே சாப்பிட சென்றவர் மழைநீரில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 573 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, விதவை உதவித்தொகை, தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு மனுக்கள், தொகுப்பு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 573 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


