News May 10, 2024
திருச்சி அருகே கருத்தரங்கம்

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சட்டத்தின் பரிணாம வடிவங்கள் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நேற்று நடந்தது.பள்ளியின் செயலாளர் மீனா தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
Similar News
News April 21, 2025
உறையூர் குடிநீர் விவகாரம் – அமைச்சர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.21) அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழப்பு என்பது ஆதாரமற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப மருத்துவரே சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மேலும், சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
News April 21, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 21, 2025
திருச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட அளவிலான கோடைகால கட்டணமில்லா பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, வூசூ, கையுந்துபந்து, மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில்
18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தினமும் உணவு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளனர்.