News August 26, 2025
திருச்சி: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

திருச்சி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
Similar News
News August 26, 2025
திருச்சி: போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் தற்போது பருவமழையை முன்னிட்டு வளர்ப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்திய பெருங்கெண்டை, கட்லா, ரோகு மற்றும் மிர்கால் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. எனவே மீன்குஞ்கள் தேவைப்படும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து மீன்வளர்த்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW!
News August 25, 2025
திருச்சி: அரசு ஊழியர்களுக்கு பயிலரங்கம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம் வரும் செப்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.