News February 4, 2026
திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (33). இவர் நேற்று மேலவாளாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் சேகர் (50) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
திருச்சி: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
திருச்சி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி தாயனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், டெல்டா மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார். இதில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட வேலை தேடுவோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
திருச்சி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


