News August 5, 2025

திருச்சி: அமைச்சரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள்

image

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் ஊடகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதனை திருச்சி டிஸ்ட்ரிக்ட்பிரஸ் & மீடியா கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம், கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம், தமிழக நிருபர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மாலை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர்.

Similar News

News August 6, 2025

முசிறியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்டம், முசிறியில் டாக்டர் ஜி.விஸ்வநாதன் பிள்ளை கல்வி அறக்கட்டளை மற்றும் முசிறி லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜிவி ஐடிஐ என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இதில் பாலிடெக்னிக், ஐடிஐ படித்த மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 6, 2025

திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News August 6, 2025

திருச்சி: பொதுத்தேர்வு அசல் சான்றிதழ் நாளை விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.07) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!