News January 21, 2026
திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் – 20 ஆண்டு சிறை

லால்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அருகில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாயார் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜா கைதுசெய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், ராஜாவுக்கு 20ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News January 31, 2026
திருச்சி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
திருச்சி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
திருச்சி: தைப்பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நாளை (ஜன.31) இரவு 11:50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக நாளை மறுதினம் (பிப்.1) காலை 11 மணியளவில் தூத்துக்குடி சென்றடையும். பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


