News August 20, 2025

திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

image

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

image

பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயிலானது வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களை தவிர்த்து காரைக்குடி, திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

பேரூராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து கூறிய கலெக்டர்

image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தமிழகத்தில் 2ஆவது இடம் பிடித்தது. அதற்கான விருதையும் பெற்றது. விருது பெற்ற பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.கார்த்திகேயன் ஆகியோரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் கூறினார்.

News August 20, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா?

image

திருச்சி மக்களே..! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனில் ஈஸியா டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். <>இந்த லிங்கில் சென்று <<>>உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.<<17466079>> பாகம் 2 <<>>

error: Content is protected !!