News September 3, 2025

திருச்சி: அதிக பயணிகளை கையாண்டு சாதனை

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவைக்கு போட்டியாக ஏர் இந்தியா நிறுவனமும் சேவை அளித்து வருகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரே நாளில் உள்நாடு மற்றும் வெளிநாடு என 7293 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இரண்டாவது முறையாக எட்டப்பட்டுள்ளதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

திருச்சி: மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு 187 இடங்கள் காலியாக உள்ளன. காலி இடங்கள் தொடர்பான விவரங்களை www.kapvgmctry.ac.in என்ற தளத்தில் காணலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

திருச்சி மக்களே இலவச பயிற்சி, Miss பண்ணாதீங்க!

image

திருச்சி கிராமபுர இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் IOB வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச ⏩செல்ஃபோன் பழுது நீக்கம், ⏩சிசிடிவி கேமரா பொருத்துதல், ⏩வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. Bank PassBook, Photo, Aadhaar, Ration Card போன்ற ஆவணங்கள் அவசியம். விவரங்களுக்கு 8903363396 எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க!)

News September 5, 2025

திருச்சி: சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா துறையால், சுற்றுலா தொழில் முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tntourismawards.com என்ற தளத்தில் படிவங்களை பூர்த்தி செய்து வரும் 15-ம் தேதிக்குள், தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!