News August 5, 2024

திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டி

image

திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் வரும் 09.08.2024 மற்றும் 10.08.2024 ஆகிய நாட்கள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. 8  முதல் 20 வயதுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்று தகுதியானவர்கள் மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9865249357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 24, 2025

திருச்சியில் ஏப்.28, பி.எஃப் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத பி.எஃப் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பி.எஃப் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என பி.எஃப் கமிஷனர் ஆசிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே SHARE பண்ணுங்க!

News April 24, 2025

அஞ்சலி செலுத்த வாடிகன் புறப்பட்ட திருச்சி எம்எல்ஏ

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் விமான மூலம் இன்று வாடிகன் புறப்பட்டார். அவரோடு அமைச்சர் ஆவடி நாசார் மற்றும் மத போதகர்கள் வாடிகன் செல்கின்றனர்.

error: Content is protected !!