News August 11, 2024

திருச்சியில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

image

அரியலூர் கீழ்க்கடை பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரத்தீஸ். இவர் நேற்று திருச்சியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று மாணவர் பலியானர். அவரது சரடலம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 24, 2025

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 24, 2025

இரு தரப்பினர் இடையே மோதல் -ஒருவர் கொலை

image

திருச்சி தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே முன்விரோதம் காரணமாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் தாராநல்லூரைச் சேர்ந்த கருக்குவேல் என்பவர் உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 23, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!