News March 28, 2025
திருச்சியில் 485 மாணவர்கள் பொது தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 21173 ஆகும். அதில் இன்று நடைபெற்ற தேர்வில் 20688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்களில் 323 பேர் பெண்களில் 162 பேர் என மொத்தம் 485 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News February 27, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 27, 2026
திருச்சி: தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி – ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
News February 27, 2026
திருச்சி: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!


