News March 28, 2025
திருச்சியில் 485 மாணவர்கள் பொது தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 21173 ஆகும். அதில் இன்று நடைபெற்ற தேர்வில் 20688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் ஆண்களில் 323 பேர் பெண்களில் 162 பேர் என மொத்தம் 485 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News February 27, 2026
திருச்சி: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News February 27, 2026
திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.
News February 27, 2026
திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.


