News December 20, 2025

திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News January 17, 2026

திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

image

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!