News September 3, 2024
திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

திருச்சி மாநகரத்தில் வரும் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 9ஆம் தேதி சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்புடன், எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் கொண்டாடும் வகையில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் தொடங்கி இந்த அணி வகுப்பு உறையூர் காவல் நிலையத்தில் முடிவுற்றது.
Similar News
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
திருச்சி: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-33 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News August 14, 2025
Way2News எதிரொலி: மாந்துறையில் குடிநீர் குழாய் சீரமைப்பு

திருச்சி மாவட்டம், மாந்துறை சரஸ்வதி கல்லூரி அருகில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று குழாய் கசிவை சரி செய்து, தண்ணீர் தேங்கி இருந்த இடத்தில் மணல் நிரப்பி சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.