News September 10, 2025
திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் செப்.,13-ம் தேதி திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டு திருச்சி கோட்டை காவல் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கோட்டைக்காவல் துணை ஆணையரிடம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
Similar News
News September 10, 2025
திருச்சி: கட்டணமில்லா வக்கீல் வேண்டுமா?

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 00431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️ இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 10, 2025
திருச்சி: புதிய ரூட்டில் விஜய் பிரச்சார பயணம்

திருச்சியில் வரும் 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே வழங்கபட்ட வழித்தடங்களை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய வழிதடம்
டிவிஎஸ் டோல் கேட் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி, போஸ்ட் ஆபிஸ் ரவுண்டானா, பாரதியார் சாலை,பாலக்கரை, மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரச்சார பேச்சு ,சத்திரம் செல்லாமல் பால்பண்ணை வழியாக அரியலூர் செல்ல உள்ளார்.
News September 10, 2025
திருச்சி கலெக்டர் கொடுத்த முக்கிய அப்டேட்

திருச்சி குழந்தை உதவி மைய அலகில் ஒரு வருட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, 3 மேற்பார்வையாளர் பணியிடம், 3 வழக்குபணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான படிவத்தை https://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 24-ம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.