News June 6, 2024
திருச்சியில் மாஜி அமைச்சர் பேட்டி

திருச்சியில் இன்று அதிமுக மாஜி அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா இனி அவர்களுடன் கூட்டணி இல்லை, என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். கட்சியை வளர்த்தவர்களுக்கு தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. மேலும், அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சிஅல்ல, ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் என்றார்.
Similar News
News August 23, 2025
திருச்சி என்.ஐ.டி – இல் வேலை வாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு வரும் 26ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.nitt.edu என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அசல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
திருச்சி: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <
News August 23, 2025
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் 2 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.