News January 23, 2025

திருச்சியில் பொது விநியோகத் திட்ட கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, தொட்டியம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 4, 2025

திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

திருச்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

திருச்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

திருச்சி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

image

திருச்சி மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 50,089 ஹெக்டேர் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது டிட்வா புயலால் ஏற்பட்ட காரணமாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக, நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட, பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!