News March 27, 2024
திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர் தினேஷ் மற்றும் தேர்தல் பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News October 14, 2025
திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News October 14, 2025
திருச்சி: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <
News October 14, 2025
திருச்சி: பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று புதிதாக வாங்கிய ஆட்டோவில் தனது மகள் கிரேசிக்காவை (10) அழைத்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜ்குமார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.