News April 1, 2024
திருச்சியில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் எஸ்.இப்ராஹிம் இன்று திருச்சியில் பேட்டியளித்தார்.அதில், கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்பொழுது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சியிடம் வருமான வரியை கட்ட சொல்வது, தேர்தல் நேரத்தில் நெருக்கடியை கொடுப்பதற்காக செய்யப்படுகிறது என்றார்.
Similar News
News April 19, 2025
பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க
News April 18, 2025
மணப்பாறை அருகே கபடி போட்டிக்கு அழைப்பு

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி வரும் ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் 87548 59623, 90472 66007 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்க பகுதி கபடி வீரர்களுக்கு இதை SHARE செய்யவும்.
News April 18, 2025
திருச்சி: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.