News March 29, 2024
திருச்சியில் இந்தியா கூட்டணிக்கு பெரும் ஆதரவு

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக 50க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Similar News
News February 18, 2026
துவாக்குடி: சர்வீஸ் சாலை விசாரணை தேதி அறிவிப்பு

திருச்சி பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் சாலை அமைப்பதற்காக, நில உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணை எல்லக்குடி கிராமத்தில் வரும் 20ம் தேதியும், பாப்பாகுறிச்சி கிராமத்தில் 24ம் தேதியும், அகரம் கிராமத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விசாரணை முடிவுற்றவுடன் 3 கிராமங்களுக்கும் தீர்ப்பானை பிறப்பிக்க, துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
திருச்சி கல்லூரியில் பரபரப்பு: குளிர்பானத்தில் கிடந்த பல்லி வால்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 18, 2026
திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


