News April 25, 2024
திருச்சியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் தவிப்பு.

திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.
Similar News
News August 21, 2025
திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<
News August 21, 2025
திருச்சி: தமிழக காவல்துறையில் வேலை

திருச்சி மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<
News August 21, 2025
திருச்சி: மாவட்ட விதைச்சான்று இயக்குநரகம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சன்ன ரக நெல் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ரக விதைகளை விவசாயிகள், விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற விதைகளில் விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட விதைச்சான்று இயக்குனரகம் அறிவித்துள்ளது.