News October 20, 2024

திருச்சிக்கு நடந்தே சென்ற புதுக்கோட்டை மக்கள்

image

பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாத அந்த நாளில் புதுக்கோட்டை மக்கள் கால்நடையாகவே பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். திருச்சிக்கு கால்நடையாக செல்லும் பயணிகள் தங்கி இளைப்பார ரெங்கம்மா சத்திரம், அம்மா சத்திரம், நல்லூர், மாத்தூர் போன்ற இடங்களில் தொண்டமான் மன்னர்கள் சத்திரங்களை கட்டியிருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இன்னும் இந்த சத்திரங்களை காணலாம். “காலச்சுவடு”. ஷேர் செய்யவும்….

Similar News

News July 10, 2025

சமூக நல்லிணக்க விருது; ஆட்சியர் அறிவிப்பு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்தவும் கௌரவ படுத்துவதற்கும் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை பெற தகுதியான புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்புத்துள்ளார்.

News July 9, 2025

புதுக்கோட்டை: ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

image

புதுகை மாவட்டம் முழுவதும் ஜூலை12ஆம் தேதி அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News July 9, 2025

புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003132>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

error: Content is protected !!