News March 19, 2024

திருச்சி:கல்லூரியில் பல்சுவை போட்டிகள்.

image

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் லக்க்ஷயா எனும் தேசிய அளவிலான பல்சுவை போட்டிகள் கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், தமிழகம் முழுவதிலிருந்தும் 25 கல்லூரிகளை சேர்ந்த 325 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் வென்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மென் பொறியாளர் பாலாஜி சங்கர் பரிசுகளை வழங்கினார்,

Similar News

News October 30, 2025

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

image

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.

News October 30, 2025

திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

image

திருச்சி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News October 30, 2025

திருச்சி: உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து

image

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டத்தில் விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் இல்லாமலோ, அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!