News April 22, 2025
திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Similar News
News April 22, 2025
கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பட்ட ஆணையத்தின் சார்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உறைவிடம் சாராத இலவச பயிற்சி 21 நாட்கள் வழங்கப்பட இருக்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை இதில் தடகளம், கால்பந்து, கபடி ஹாக்கி ,கூடைப்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 – 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும்
News April 21, 2025
குறைதீர் கூட்டத்தில் 514 மனுக்கள் பெறப்பட்டன

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் பெறப்பட்டன.
News April 21, 2025
சிவகங்கையில் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 25.04.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.