News March 29, 2025
திருக்கோவிலூர்: 130 கோடியில் தடுப்பணை புதுப்பிப்பு

விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருக்கோவிலூர் தடுப்பணை மறுசீரமைப்புக்கு தமிழக அரசு 130 கோடி ஒதுக்கி உள்ளது. அதனை அடுத்து இன்று மார்ச் 29 தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள தடுப்பணையை பார்வையிட்டனர். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் வட்டாட்சியர் குமரவேலன் உட்பட பலர் இருந்தனர்.
Similar News
News March 31, 2025
தீராத குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும் கோவில்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News March 31, 2025
விழுப்புரம் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இரவு முதல் கட்டண உயர்வு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சொந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி மற்றும் பல சுங்கச்சாவடிகள் அடங்கும் என்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <