News April 21, 2025
திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News September 14, 2025
மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10 கோடி இழப்பீடு

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் காசோலை குற்ற வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் மற்றும் குடும்பத்த தகராறு வழக்குகள் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்றத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்ட 2519 வழக்குகளில் 1839 வழக்குகள் தீர்க்கப்பட்டு மொத்தம் ரூ.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குமரி சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
குமரி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
குமரி: வாகன விபத்து 13.60 லட்சம் காசோலை வழங்கல்

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றத் தொடக்க விழா மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதிகளான சுந்தரய்யா, செல்வகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் செல்வன் ஜேசு ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக மோட்டார் வாகன இழப்பீடு சம்பந்தமான இரண்டு வழக்குகளுக்கு 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கபட்டது.