News November 2, 2025

திராணி இருந்தால் EPS-ஐ கைது செய்யுங்கள்: EX அமைச்சர்

image

கொடநாடு கொலையில் EPS குற்றவாளி என்றால் போலீஸ் என்ன செய்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, EPS-ஐ ஜெயிலில் போட வேண்டியதுதானே எனவும், திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், EPS CM-ஆவது தெய்வத்தின் தீர்ப்பு எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் CM கனவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 2, 2025

NDA ஆட்சியில் அதிக தனியார்மயமாக்கல்: பிரியங்கா

image

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.

News November 2, 2025

ஜடேஜாவை வாங்க ஆர்வம் காட்டிய RR

image

IPL 2026 ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களை மாற்றும் பணிகளில் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஜடேஜாவை வாங்க RR அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், ஜடேஜாவை கொடுக்க முடியாது என CSK கறாராக சொல்லிவிட்டதாம். ’ஜட்டு பாய் CSK சொத்து’ என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். மேலும், RR அணிக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்க DC அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

News November 2, 2025

இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

image

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!