News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News January 8, 2026
புதுச்சேரி ஜிப்மருக்கு தேசிய அளவில் விருது

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும் 2024–2025 ஆம் ஆண்டிற்கான ‘காயகல்ப்’ விருது திட்டத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதற்காக ஜிப்மருக்கு ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்கான இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
புதுவை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


