News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News September 18, 2025
சனிக்கோளை பார்க்க புதுவையில் ஏற்பாடு!

வானில், சனிக் கோளின் எதிர்நிலை நிகழ்வு நடக்க உள்ளது. அதையொட்டி, அப்துல் கலாம் அறிவியல் மையம் & கோளரங்கம் சார்பில், செப். 21ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை காணலாம். இந்த நிகழ்வு பற்றி, இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார். இதனை மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம்.
News September 18, 2025
காரைக்கால்: குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம் திறப்பு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் அமைச்சர் நமச்சிவாயமும் இன்று துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வீடியோ காணொளி மூலமாக காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
News September 18, 2025
புதுச்சேரி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை

வானிலை ஆய்வு மையம் வெளிட்ட அறிக்கையில் தெற்கு வங்ககடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சட்டப்பேரவையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது.