News September 15, 2025
தியாகராஜர் கல்லூரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி அருகே ரயில்வே தண்டவாளம் வழியாக சுமார் 35 வயது மதிக்கதக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிந்தார். பின்னர் அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரிகின்றனர்.
Similar News
News September 15, 2025
ரூ.8 லட்சத்தில் புதுபொழிவுடன் ராஜாஜி பூங்கா சீரமைப்பு பணி

மதுரை ராஜாஜி பூங்கா ரூ 8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: சேதமடைந்த சறுக்கு விளையாட்டு சாதனங்கள், கழிப்பறைகள் நடைபாதைகளில் டைல்ஸ் பதித்தல் பணிகள் நடந்து வருகிறது. திட்டமிட்ட கால அளவையும் தாண்டி பணிகள் தாமதமாக நடைபெறுகிறது பூங்காவை திறப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது விரைவில் திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
News September 15, 2025
மதுரை நகர் பகுதிகளில் மின்தடை

மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செப். 16) நாளை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை எல்லிஸ் நகர் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு குடிசை மாற்றிய வீடுகள் போடி லயன், என்ன கிராஸ் ரோடு மகாபாரதம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள் ரயில்வே காலனி பைபாஸ் ரோடு, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம், ஆண்டாள் புரம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
கப்பலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

மதுரை கருவேலம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கண்ணன் (35). நேற்று மாலையில் இவர் பைக்கில் கருவேலம்பட்டி-கப்பலூர் ரிங்ரோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பைக்கில் மோதியது. அதில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.